புதன், ஜூலை 28, 2010

ஜோக் கடிக்கிறாங்க 2


ஜோக் கடிக்கிறாங்க 2



நான் முதல் முதலில் கவிதை (அப்படின்னு நானா தான் சொல்லிக்கிறேன் ) கிறுக்க ஆரம்பித்தது எப்போது தெரியுமா +2 படிக்கும் போது (நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ) என் நண்பன் கவிதை எழுதுவதை பார்த்து நானும் கிறுக்கறேன் பார் என்று கிறுக்கியது இதோ



பாடினேன் ஒரு பாட்டு



மாணவர் மத்தியில் கிடைத்தது பல ஓட்டு



இதற்கு விழுந்தது பல கை தட்டு



ஆசிரியர் வந்தார் ஹாலில் நடை போட்டு



இது என் கண்ணில் பட்டு



வாய்க்கு போட்டேன் ஒரு பூட்டு



என் மீது பொறாமை கொண்ட மாணவனால்



எனக்கு வந்தது வேட்டு




இதை படிச்சவுடனே எதையாவது எடுத்து உடைக்கணும் னு தோணுதா




அப்ப இதை உடைங்க சீ இதை படிங்க



யானைக்குள்ளே எறும்பு இருக்க முடியும் ஆனா எறும்பின் உள்ளே யானை இருக்க முடியுமா



முடியாதுனு சொல்வீங்களே



அதான் கிடையாது



எறும்பின் மனசுக்குள்ளே யானை இருக்கும் ல



இப்பவும் உடைக்கணும்னு தோணுதா



என்னோட இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்



கரும்பு சாருக்குள் விழுந்த எறும்பு உற்சாகமாய் நீச்சலடிக்குதா இல்லே வெளியில் வர தத்தளிக்குதா



இப்படி யோசிக்கும் போது கூடவே



அப்படியே பாவப்பட்டு எறும்பை எடுத்து வெளியில் விட்டாலும் அது நம் கைக்கு முத்தம் கொடுக்குமா இல்ல கடிக்குமா



னு டவுட் வருதே



இப்ப உடைக்கிறது பத்தி யோசிக்காமே பதிலை பத்தி யோசிப்பீங்கலே



ஹி....ஹி....



ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

  1. அதுசரி.. முதல் கவிதைக்கு என்னுடைய பாராட்டு (அவ்வ்வ்வ்வ்....)

    அடுத்ததெல்லாம் ‘கடி’தான்... எறும்பே பரவாயில்லைங்க...

    பதிலளிநீக்கு
  2. அடடா! இப்பெல்லாம் நீங்கள் கவிதை எழுதுவதில்லையா????

    பதிலளிநீக்கு
  3. நல்ல கடியா இருக்கு . எறும்பு தேங்ஸ் சொல்லும் ஆனா புரியுமா உங்களுக்கு...


    ((ஏன் இவ்வளவு இடைவெளி ஒவ்வொரு வரிக்கும் ))

    பதிலளிநீக்கு
  4. க‌டியிலும் இவ்வ‌ள‌வு கோர்வையா?... ந‌ல்லா இருந்த‌து ச‌ர‌வ‌ண‌ன்..

    பதிலளிநீக்கு
  5. உங்க முரண்பாடுகள் கவிதை எங்க! ரொம்ப அருமையா இருந்தது..குறிப்பாக கடைசி பொங்கல் மேட்டர் :-)

    பதிலளிநீக்கு
  6. ஆனாலும் உங்களுக்கு ரொம்பவும் குசும்புதான்
    :-)

    பதிலளிநீக்கு
  7. nandri kumar
    nandri paalaasi
    nandri vanadhy
    nandri jailaani
    nandri steban
    nandri devadharshn
    nandri giri

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்